தலையணை

எனக்கு தெரியாத
மானிட ரகசியமா ?

நாள் முழுவதும்
சிந்தித்ததை இரவு
உறங்கும் முன்
என்னிடம் பகிர்ந்து
கொள்ளாதவர்களே
கிடையாது.

அதிலும் சிலர்
என்னிடம் யோசனை
கேட்பதும் உண்டு.

நமக்கு ஏன் வம்பு
என்று நான் பேசாமல்
இருந்து விட்ட
சமயங்கள் ஏராளம்..

மனிதர்கள் ஆழ்ந்த
உறக்கத்தில்
இருக்கும் பொழுது
அவர்களது இதயமும்
மூளையும் என்னிடம்
ரகசிய பேச்சு வார்த்தை
நடத்தும்.

எங்கள் முடிவும்
மனிதர்களுக்கு
நன்மையாகத்தான்
அமையும்.

என்னை சொந்தம்
கொண்டாடுபவர்கள்
தப்பித்தவறிக் கூட
வேறு யாருக்கும்
என்னை கொடுத்துவிட
மாட்டார்கள்.

ஒருவரின் ரகசியத்தை
மற்றொருவரிடம் நான்
சொல்லிவிடுவேனோ
என்ற பயம் கூட
காரணமாக இருக்கலாம்.

யார் என்னை
ஸ்பரிசிக்கிரார்கள்
என்று என்னாலும்
உணர முடியுமே.

எனக்கும் விதவிதமாக
துணிகள் போட்டு
அழகு பார்ப்பார்கள்.

நான் எவ்வளவு தான்
நேர்மையாக இருந்தாலும்
நான் ஏதோ மந்திரம்
போட்டுவிட்டேன்
என்று என் மேல் பழி
சொல் போடுவோரும்
உண்டு.

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (29-May-13, 12:14 pm)
பார்வை : 94

சிறந்த கவிதைகள்

மேலே