இயற்கையினை ரசித்து விடின்
சிலம்பாட்டம் பயில்கிறதோ
சில்லென்ற காற்று ?
அசைகிறதே ஆற்றோர நாணல்
அடடா கண்கொள்ளா காட்சி....!
இயற்கையினை ரசித்திடின்
இன்பத்திற்கு ஈடில்லை
இப்பிறவி போதாது இன்னும்
இயற்கை இருக்கும்வரை
இனிய வாழ்வு வேண்டும்......!