நாட்டு நடப்பு :-4

(அ)நாகரிக பெண்!!!

தன் இல்ல
சாளரத்திற்கு,தாராளமாய்
சேலை உடுத்தி
அழகு பார்த்தவள்,

நாகரீக போர்வையில்,
சிக்கனமாய்,கோமண
அளவு துணி
உடுத்தி,வீதியில்
உலா செல்கிறாள்!!!
****************************************************************************
நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு!!!

கண்ணகி சிலை
மறைவில், காதல்
போர்வையில் கள்ள
உறவில்,தெரு
நாயென இருவர்
காமம் புரிய,

சமூகம் அக்கயவர்களை
தண்டிக்காது விட்டுவிட்டு,
கள்ளக்காதல் இதுவென்று
காதலை தண்டித்து,
கைகொட்டி சிரிக்கிறது!!!
****************************************************************************
அன்று சாதனை, இன்றோ வேதனை!!!

அன்றைய ஆட்சியில்
படிப்பறிவே இல்லாத
கர்மவீரர் காமராசர்
குடிமக்களை படியென
அழைப்பு விடுத்து
அறியாமையை போக்கும்
முயற்சியை உயிர்
மூச்சென செய்தார்,

இன்றைய ஆட்சியில்
படித்த மேதாவி,
குடிமக்களை குடியென
அழைப்பு விடுத்து
குடி மகன்களாய்
மாற்றுவதே உயிர்
மூச்சென செய்து
கொண்டிருக்கிறார்!!!
****************************************************************************
வெளிநாட்டு மோகம்,உள்நாட்டில் கேவலம்!!!

வெளி நாட்டு,
உயர் ஜாதி
ரகமாம்,விதை
இல்லா பழமாம்,
சொல்லி சொல்லி
பெருமையடித்து பெரும்
இலாபம் ஈட்டியவன்,

இன்று மருத்துவமனையில்,

வாரிசு இல்லையாம்
விந்து தானம்
வேண்டி கேட்டு
வெட்கமில்லாம நிற்கிறான்!!!
*************************************************************************** திரை பாடங்கள் அன்றும் இன்றும்!!!

அன்றைய கருப்பு
வெள்ளை திரை
பாடங்களில்,முதலில்
குற்றம் ஐந்து
நிமிடங்களும்,

அதனால் ஏற்படும்
விளைவுகளையும்,வலிகளையும் வேதனைகளையும்,மற்றும்
தண்டனைகளையும்
மீதமுள்ள 2.55மணி
நேரமும் போதித்தது!!!

இன்றைய வண்ணமயமான
திரை பாடங்களில்,
முதல் 2.55மணிநேரம்,
குற்றங்கள் எப்படி
எல்லாம் செய்யலாம் என்றும்,

மீதமுள்ள ஐந்து
நிமிடங்களில்,அதிலிருந்து
தண்டனை பெறாமல்
எப்படி எல்லாம்
தப்பிப்பது என்றும் போதிக்கிறது!!!
****************************************************************************
அன்புடன் நவீன் மென்மையானவன்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (1-Jun-13, 1:19 am)
பார்வை : 199

மேலே