என்னதான் வேண்டும்
அழகான பனித்துளியும்
அமைதியான பூங்காற்றும்
பால்மணம் மாறாத
மழலை சிரிப்பும்
என பார்த்து ரசிக்க எத்தனையோ
விஷயங்கள் இருக்க
பழிவாங்க துடிக்கும்
வன்முறை வாதிகளே என்னதான் வேண்டும்
உங்களுக்கு
அழகான பெண்களை ஆசிட் ஊற்றி
உருகுலைப்பதும்
அறுபது வயது மூதாட்டியை கூட
விட்டு வைக்காமல் துரத்துவதும்
பிச்சு கரங்களை பிடித்து
கொஞ்ச வேண்டிய
குழந்தைகளை கற்பழித்து கொல்வதும்
எத்தனையோ நாட்டில் உணவில்லாமல்
இறந்து கொண்டிருக்க
இங்கு வயிறு நிரம்ப உண்டு விட்டு
உலகையே உன்ன நினைப்பது
எந்த விதத்தில் நியாயம்
உறங்கிக் கொண்டிருக்கும் போதே
இறந்து விடுவோமோ ?
எந்த நேரத்தில் என்ன நடக்குமோ ?
என்று பரிதவித்து வாழும்
மக்களுக்கிடையில்
அமைதிப் பூங்காவாக
இருக்கும் இடத்தையும் அளிதெடுக்க
அலையும் உங்களுக்கு என்னதான் வேண்டும்
ஒரு பிடி உணவும் ஒதுங்க ஊர் இடமும்
பதும் எங்களுக்கு
எங்களை நிம்மதியாக வாழவிட என்னதான் வேண்டும் உங்களுக்கு ?