முரண்பாடுகளின் ஊர்வலம் .......!
இரைதேடி அலையும் கவிப்புலி
===விருந்தெனக் கேட்பது இங்கே
உரைதேடி வருகின்ற கூட்டமதன்
===உணர்வைக் கிள்ளும் சீண்டல் ;
அரைமூடித் தேங்காயில் அம்பலம்
===உடைந்தபின் அழுகல் நாடகம்
விரைந்தோடி வருகின்ற பாவலரே
===நெடுநாள் பட்டினிக்கேது வழி ?!
உளியடி பெற்ற சிலைகளும்
===குருதி கொட்ட நின்றதிங்கே
ஒளியடி பட்டதோ கீற்றுகளும்
===ஈரம் சொட்டப் போனதிங்கே ;
தெளிவாய் நின்றது முரண்பாடு
===தேநீர் விருந்தினது கூப்பாடு
நெளிவாய் வென்றிடும் கருத்தே
===வேட்கை எதற்கோ பிற்பாடு ?!
பகுத்தறியும் அறிவிலிகள் கண்டு
===யுகங்கள் தம்மைக் கழித்தது
தொகுத்தறியும் திறனும் ஏனோ
===பேடியாய் தர்க்கம் பழித்தது ;
வகுத்தறியும் ஈவும் வாய்பிளக்க
===கண்டதோர் பொய்க் கணக்கு
உகுத்துவிட்ட சொற்க் கிருமிகள்
===பல்லிளிக்க கூடுவது பிணக்கு ;
வண்ணப் பூச்சில் மெருகேறும்
===அழகோ புறத்தே மிளிரும்
எண்ணப் பூச்சில் வென்றுவிட
===ஆணவம் அகத்தே ஒளிரும் ;
திண்ணப் பேச்சில் தெளிவின்றி
===குதிக்கும் மாந்தர் அவர்கட்கு
உண்ணக் கொடுப்போம் இனிய
===புரிதலின் ஈடற்ற தீஞ்சுவை ;
ஈசலின் வாழ்நாள் போலவே
===போலிக் கவித்தரம் மரிக்கும்
ஊசலில் வருவதும் மணமென
===துள்ளும் மடந்தை சிரிக்கும் :
பூசலின் தோரணங்கள் அதிலோ
===வீணாய்ப் போன ரசனைகள்
வீசலில் வீரியமில்லை என்றால்
===எழும் துணிவிற்கேது பயன் ?!