நட்பின் சிறப்பு

தூண்கள் தூர்ந்துபோகாதவரை
கட்டிடங்கள் கவலைப்படுவதில்லை!
நண்பர்கள் நம்மோடிருக்கும்வரை
நம் நம்பிக்கைகள் நசிந்துபோவதில்லை!
உப்பில்லா வீட்டில்
உணவுகள் ருசிப்பதில்லை!
நட்பில்லா வாழ்வில்
நம்பிக்கைகள் துளிர்ப்பதில்லை!
நரை,மூப்பு,பிணி என்று
நட்பிற்கு ஏதுமில்லை!
நான்கு புறம் புயல் வரினும்
நட்பு மரம் சாய்வதில்லை!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (11-Jun-13, 5:30 pm)
பார்வை : 2124

மேலே