நிறைவருள் தருவாய் ரகுமானே !

நீ அற்பத்துளியில் இருந்து எங்களை
இந்த உலகிற்கு அற்புதமாக தந்தாய்

மேன்மை மிகுந்த பெற்றோர்களை
இந்த பூமியில் நிறைவாக்கி தந்தாய்

எங்கள் ஈமான் உன் மீது தான் உறுதியாக
எங்கள் இறை வேதம் திருமறை “குர்ஆன்"

சங்கை மிகுந்த சன்மார்க்கம் தந்த எங்கள்
பூமான் நபி போதனை எங்கள் வழிகள்

நல்ல வாழ்கையும் வாழ்ந்தோம் பூமியில்
இன்னும் வசந்த்தமும் இருந்தது வளர்சியில்

நிலை இல்லாத இந்த உலகத்தில் விலை இல்லை
பாவங்கள் குறை இன்றி கூடிக்கொண்டே போகிறது

என்ன சொன்னாய் ? என்ன செய்கிறோம் !
ஆதாயம் தேடி உலகில் ஆசையோடு

பாசம் மாறிய வேஷம், மோசம் செய்ய என்னும்
மனைவி மோகத்தில் பெற்றவர்கள் வீதியில்

வாரிசுக்கு வளம் சேர்க்க ,பேராசை பணம் தேடி
நிகழப்போகும் மரணத்தின் நிலை அறியாது

உலகத்தில் வாழ்வோம் இன்னும் என்ற இறுமாப்பு
பிறப்பும் , இறப்பும் உனக்கு மட்டுமே அறிந்தது

பிறப்பின் சந்தோசம் , இறப்பின் இழப்புகள் நீ தந்தது
எல்லாம் அறிந்து வைத்திருப்பவன் நீ மட்டுமே

உலக வாழ்வு நிரந்த்தரமில்லை நாங்கள் அறிவோம்
உறுதியான எங்கள் ஈமானை இன்னும் நிலையாக்கு

ஐ வேலை தொழுகையை நேரத்துடன் நிறைவாக்க
மேன்மையான ரமலானின் நோன்பினை நோற்று
ஜக்காத்தை தவறாமல் கொடுத்து வந்து
ஹஜ்ஜை நிறைவு செய்யும் பாக்கியத்தை தந்து
பொருத்தத்தை எமக்கு அருள்வாய் ரஹுமானே !

துவாவுடன்
ஸ்ரீவை.காதர.

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (15-Jun-13, 7:18 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 68

மேலே