லிமரைக்கூ : பாவம் தவிக்குது சாமி....!
இரும்புக்கு காதலாம் தென்றலோடு
துருப்பிடித்து தொலைந்தது கண்டு
இதயமே இனியுனக்கு வேலிபோடு ...
கதறித் துடிச்ச ஆட்டோட சாவம்
உழுதவன் எல்லாம் உத்தியோகம் தேட -சாமி
தகரக் கத்தியோட தவிக்குது பாவம்.....
நிழல் மட்டும் துரத்தும் தனிமையும்
நிலவும் ஒளிந்திட நீளும் இரவும்
நினைக்க மறப்பேனா இறைவா உம்மையும் ...
விதைச்ச நெல்லிங்கே விழலாகிப் போச்சு
விடியாத இரவாக விவசாயி உயிராட -இன்னும்
முடியலையே உங்க அரசாங்கப் பேச்சு....