மலர்களை மறந்த பட்டாம் பூச்சிகள்.....!!!!

மலர்களை மறந்த பட்டாம் பூச்சிகள்.....!!!!

பாவையே உன் உதடுகளை
பட்டாம்பூச்சிக்கு ஏன் காட்டினாய் ?

பார் அங்கே........

ரோஜாவிடம் மோதி மோதி அது
லிப்ஸ்டிக் போட்டுக் கொள்கிறது.....

மலரிடம் தேன் குடிப்பதை அது
மறந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.....

மறுபடியும் நீ சிரிப்பதை நிறுத்து......
மலர்களில் மகரந்தச் சேர்க்கை இனி தொடங்கட்டும்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (2-Jul-13, 12:12 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 94

மேலே