நான் தேடும் "அவள்" ‍(01)

இந்த ஜென்மத்தில் இல்லாத காதலிக்காக,
உயிர்ப்பித்த சில வரிகள்!

கனிசப்பார்வை காட்டி,
என் மனங்கெடுத்து,
வாழ்வில் மனங்கொடுத்தவள்!

முதல் முறை மடல் கன்டு, முகம் சுளித்து,
புலனற்றதென புருவம் உயர்த்தி,
என் பேனா முனை பேச வைத்தவள்!

மடல் விரிக்க மன்றாடி, மடல் ஒன்று அளிக்கையில்
முத‌ல் முறை ம‌றுத்து, ம‌று முறை ம‌கிழ்ந்து,
ச‌ன்த‌ன‌ப்புன்ன‌கை வீசிய‌வ‌ள்!

பேருந்து இருக்கையின் வ‌ர்ணம் உரித்து,
என் பெய‌ரை செதுக்கி,
உள்ளக்க‌ல்வெட்டு உருவாக்கிய‌வ‌ள்!

மூன்று நாள் பிரிவின்,
நான்கு க‌ண்ணில் நீர் வ‌ழிய‌,
முத‌ல் முத்த‌ம் த‌ன்த‌வ‌ள்!

அரை ம‌ணி தாம‌த‌மாய் வ‌ன்து,
என் அத்த‌னை கோப‌த்தையும்,
அரைச்சிரிப்பில் அழித்திட்டிவ‌ள்!

நீல‌ வான‌ம் காட்டி,
நீள‌மாய் க‌தை சொல்லி,
ல‌ட்சிய‌ம் க‌ற்றுத்த‌ந்த‌வ‌ள்!

பூஜ்ய‌ இடைவெளியில்,
வ‌ம்புக‌ள் வ‌ள‌ர்க்கையில்,
வ‌ர‌ம்புக‌ள் விதித்திட்ட‌வ‌ள்!

சில‌ நேர‌ம் சின‌ம் கொன்டு,
சிரிக்காம‌ல் விடை கொண்டு,
என் இர‌வை விரிவாக்கிய‌வ‌ள்!

வெள்ளிய‌ன்று விடிந்த‌தும்,
விருச்சிக‌த்தின் விள‌க்க‌ம் க‌ண்டு,
என் விதியை காத்த‌வ‌ள்!

முடி திருத்தி, முக‌ம் திருத்தி,
அவ‌ள் முக‌ம் காண ப‌ய‌ணிக்கையில்,
முக‌த்தை திருப்பி,முள் தைத்த‌வ‌ள்!

ப‌ச்சை பிடிக்காதென்றும்,
ப‌ரிச‌ளித்த‌து நானென்ப‌தால்,
ப‌ச்சைத்தாவ‌ணியை ப‌ட்டுத்தாவ‌ணியென்றவ‌ள்!

முக‌ம் காணா சில‌ நாட்க‌ள்,
முழுதின‌மும் வாட‌வைத்து,
தாயின்றி சோறுண்ட‌ கால‌மெனவாக்கிய‌வ‌ள்!

அதி காலை பூத்து, அந்தி வ‌ரை காத்து,
என் வ‌ரவு வெற்றிட‌மானால்,
வாடி வ‌தைந்து, ம‌ல‌ர்க்குல‌ம் சேர்ப‌வ‌ள்!

வீதி சென்ற ப‌ல‌ முறைகள் வீணாகிப்போகையிலே,
உட‌ன்பாடின்மை என‌ தோண‌ வைத்து,
என் குருதிக்குழாயில் நினைவோட‌ வைத்த‌வ‌ள்!

சிர‌ம் தாழ்த்தி சென்றவ‌ளின்,
விழிய‌சைவுக்கு ஏங்குகையில்,
குட‌லுக்கும் குர‌ல்வ‌லைக்கும்,
நீர்க்குமிழி ஓட வைத்த‌வ‌ள்!

‍‍<<‍தொடரும்>>

எழுதியவர் : Aradhanam (17-Dec-10, 3:01 pm)
சேர்த்தது : aradhanam
பார்வை : 484

மேலே