வேண்டாம் ஜோதிடம்!...

ஜோதிடம்,ஜாதகம் நம்புவர்களுக்கு ஒரு கதை!....

ஒரு ஊர்ல ஒரு ராஜ இருந்தாரு!
அவருடைய அரசவையில் எப்பொழுதும்போல,
மந்திரி,ராஜகுரு,தளபதி என்று அனைவரும் இருந்தனர்...

நம் ராஜவிற்கோ வீரம் மிக மிக குறைவு,
ராஜாவிற்கு பயிற்சி அளிக்கும் ஒரு நல்ல மனிதராக தளபதி விளங்கினார்.

மற்ற அனைவரும் ராஜாவின் பயத்தை அவர் அவர் சுயநலத்திற்கு பயன்படுத்தி வந்தனர்...

இந்த நிலையின் தளபதி தனது பயிற்சியின் ஒரு கட்டமாக வேட்டையாட ராஜாவை காட்டிற்கு அழைத்து சென்றார்!..

அனைத்தும் தயார் நிலையில் இருக்க,
ராஜகுரு வந்து இப்போது நேரம் சரியில்லை,
நாளை வேட்டைக்கு செல்லலாம் என்றார்!...
பின் தளபதின் பிடிவாதத்தினால் ராஜா வேட்டைக்கு சென்றார்!...

காட்டில் எதிர்பாரதவிதமாக தடம் மாறிய ராஜ ஒரு சிங்கத்திடம் பிடிப்பட்டார்....
ஐயோ என்று அலற தளபதி ராஜாவை கண்டுபிடித்தார் ,பின் தளபதியின் உதவியுடன் சிறு காயங்களுடன் அரண்மனை திரும்பினார்....

இதை அறிந்த ராஜகுரு ராஜாவை பார்த்து,
தான் சொன்னதை நினைவுபடுத்தினார்...
ராஜாவும் அதையேற்று அன்று முதல் ராஜகுரு சொல்வதை மட்டும் கேட்க தொடங்கினார்!...
அதை தொடர்ந்து அரசவையில் பல குழப்பங்கள்...

பின் ஒரு நாள் அரசவையில் ராஜகுரு,ராக தளபதி,
மூன்று பெரும் பேசிக்கொண்டிருக்க,ராஜகுரு ராஜைவைபார்த்து உங்களுக்கு ஆயுள்காலம் குறைந்து கொண்டே வருகிறது என்று கூற ராஜாவோ அதிர்ச்சியில் நின்றார்....

தளபதி எவ்வளவு கூறியும் ராஜ சமாதனம் ஆகவில்லை,
கோபம் கொண்ட தளபதி,ராஜகுருவை பார்த்து
உங்களின் ஆயுள் எப்படி உள்ளது என்றார்,
மிக அதிகம் எனக்கு ஆயுள் காலம் 90க்கு மேல் என்றார்,
தளபதியோ, இப்பது உங்கள் வயது எத்தனை என்று கேட்க,64 என்று ராஜகுரு பதில் அளித்தார்..


கண்ணிமைக்கும் நேரத்தில் தன் வாளால் ராஜகுருவின் தலையை வெட்டி வீசிவிட்டார் தளபதி!...
ராஜாவிடம்,வாழ்க்கை நம் கையில் உள்ளது மன்னா
கணித்து கூறும் ஜோதடத்தில் வாழ்க்கை இல்லை..
90க்கு மேல் மரணம் என்றார்,இப்பொது எனாயிற்று பார்த்தீர்களா....

ராஜா மாறிவிட்டார்....

எழுதியவர் : (20-Jul-13, 11:53 am)
சேர்த்தது : பாமரன் பாபரத்
பார்வை : 208

மேலே