நிலவும் நானும்

வீதிவீதியாக சுற்றி வருகிறேன் ஆனால
எனக்கு வீடென்று ஏதுமில்லை !

என்னை சுற்றி இருப்பவர் பலர் ஆனால்
எனக்கு துணையாக எவருமில்லை!


ஊரெல்லாம் உறங்கும் கூட்டினுள்ளே
நான் மட்டும் உருளுகிறேன் வீதியினிலே !


என்னை காட்டி சோறூட்டும் தாயுண்டு ஆனால்
எனக்கு சோறூட்ட யாருமில்லை!


என்னை போல யாருமில்லை என்று
எண்ணி இருந்தேன் நேற்று வரை


இன்று உன்னை கண்டதும்
ஆறுதல் அடைந்தேன் வெண்ணிலவே!



எனக்கும் உனக்கும் ஒரே
வித்தியாசம்தான் வெண்ணிலவே!


நானோ தெரு வீதியில்!!

எழுதியவர் : prethy (20-Jul-13, 5:00 pm)
சேர்த்தது : prethy
Tanglish : nilavum naanum
பார்வை : 65

மேலே