அழுதவுடன்

தலையைப் பிடித்துக் கொள்கிறாள்
தலையைப் பியித்துக் கொள்கிறாள்
தலை நோக அடித்துக் கொள்கிறாள்.
தெரிந்தே ஏமாந்துவிட்டேனே என்று அரற்றுகிறாள்
என்னுடைய அறிவு வெல்லவில்லையே என்று
புலம்புகிறாள்.
அழுது முடிக்க விட்டேன் அவளை.
பின் அமைதியானாள் அந்த படித்த பெண்மணி.
தெளிந்த மனதுடன் நாளைப் பொழுதை நோக்கி
நிற்கிறாள் மாது
நாளை அவளுக்கு நல்ல விடியலாக இருக்கட்டும் ..

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (27-Jul-13, 8:41 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 44

மேலே