தெய்வம் இருப்பது இங்கே

தேடினாலும் கிடைக்காது
தேடவும் முடியாது
தெய்வம் என்று ஆயிரம் உண்டு
தெய்வமா என்ற சந்தேகமும் உண்டு

பத்துமாதம் எனை சுமந்து
பக்குவமாய் எனை தந்து
பாசத்தோடும் நேசத்தோடும்
வளர்த்து எனை
பாரினில் நடைபோட
வைத்தவள் தாயல்லவா?

தேவைகளை
பூர்தி செய்வதிலும்
தேனாமிர்தம்
ஊட்டி வழங்குவதிலும்
தெறிகின்ற ஒரே
தெய்வம் பெற்ற
தாயின்றி வேறொன்று உண்டோ??

தெய்வம் வடிவினில்
எனை பெற்றவள்
துணையிருக்க
தோல்வி எனக்கேது
என் வாழ்வில் என்றும் வெற்றியல்லவா!!!

பாலாஜி

எழுதியவர் : பாலாஜி (5-Aug-13, 8:03 am)
சேர்த்தது : பாலாஜி பிள்ளை
பார்வை : 74

மேலே