கடிகாரம் !!

மூன்று வேடங்களில்
வேற்றுமையற நடிக்கும்
காலக் கலைஞன்

சேரும்போது பறந்து
தனிமையில் நகர மறுக்கும்
காதல் பச்சோந்தி

1440 மலர்களும்
24 இழைநூலும் இணைந்த
மணி மாலை

மரணம் வரை
மனிதனை தொடரும்
நேர்முக வர்ணனை !!

உழைப்பவர் உயர்ந்தவர்
தாழ்ந்தவர் ஒன்றான
ஒற்றுமை உலகம்

எழுதியவர் : பாப்பாரப்பட்டி நாகராஜன் (9-Aug-13, 11:20 pm)
பார்வை : 63

மேலே