தலைவா...!

தோழர்களே..!

அஹிம்சை கோட்பாடு
அறவழியே அவர் பாடு
'அண்ணல்' ஒரு தலைவர்..!

அடங்குவது நானில்லை
அடக்குவதே என்வேலை
அந்த 'நேதாஜி' தலைவர்

வட்டமேசை மாநாட்டில்
வட்டமிட்டார் வார்த்தைகளாய்
அன்று 'ஜின்னா'வும் தலைவர்

பஞ்சசீல கொள்கை தந்து
பசுமையை பரப்பி வைத்த
பண்டிட் 'நேரு' தலைவர்

சிறு மன்னர் கூட்டத்தை
சீராக ஒன்றாக்கிய நம்
சர்தார் 'படேல்' தலைவர்


கல்வி வேண்டும் ஏழைக்கு
கடமையாய் வாய் திறந்த
'காமராஜர்' நல்ல தலைவர்

தீண்டாமை தீட்டைஎல்லாம்
தீயிட்டு கொளுத்தி வைத்த
தந்தை 'பெரியார்' தலைவர்

தாழ்ந்த தமிழினத்தை
தரம் உயர்த்த எழுந்த
அறிஞர் 'அண்ணா' தலைவர்

தமிழனின் தீர வீரத்தை
தரணியில் பரணிபாடிய
தன்மான “பிரபா” தலைவர்

இப்படி தலைவரின் பட்டியல்
நீண்டு இருக்க இன்று
தலைவன் தலைவனென்று
தலையுள்ள முண்டங்களை
தமிழனம் அழைக்கிறதே
தகுதியில்லா தலைகளுக்கு
தலைவன் பட்டம் சூட்டுவதேன்..?
தலை குனிந்து நீ சாகுவதேன் ..?

(nisha meharin = வேண்டுகோளுகிணங்க இந்த கவிதை..!)

எழுதியவர் : குமரி பையன் (10-Aug-13, 8:59 pm)
பார்வை : 429

மேலே