உண்மை என்பது என்ன ?! மாயையை புரிந்து கொல்வது...!!!
![](https://eluthu.com/images/loading.gif)
பவுர்ணமி ஒளியே
பவுடரை பூசு
பகலவன் ஒளியே
மஞ்சளை பூசு
துளசிச் செடியே
பசுமையை பூசு
நீல வானமே
நீளத்தை பூசு
விடுபட்ட வண்ணத்தை
நினைவே பூசு
பஞ்ச வர்ணமாய் நானும் மாறனும்
பந்தா அழகினை உலகில் காட்டனும்
மனுஷன் போலவே எனக்கும் ஆசையே
மாயை என்பதே மறந்து போனதே....
அங்கு தூரத்தில் அம்பு அய்யய்யோ...
கொல்லும் பசியது உண்மை அதுவன்றோ....
பசித்தால் அழகும் பறந்து போகுமே - நடைமுறை
ரசித்தால் வாழ்க்கை நலமாய் மாறுமே....!!!