தலைப்பு கீழே
இன்னும் இமையில்
மறையாமல் உன்முகம்;
என் இதயம் திருடி-
சத்தமின்றி
கொஞ்சம் சண்டையிட்டு
எப்படியோ என்னுள் வந்தாய்;
விழியை இரணமாக்கி
என் நினைவை சுமையாக்கி
எங்கோ சென்றுவிட்டாய்;
என் வார்த்தைககளின் வண்ணங்கள் நீ,
என்றும் வயதாகாத என்
இளமை எண்ணங்கள் நீ;
தொடும் தொலைவில் நீ
உன்னை தொட முடியாமல் நான்;
என் குறும்பின் எல்லையே
இனிய தொல்லையே!
உன்னை தீண்டாமல்
இனிக்காது என் பொழுது;
இதோ இன்னும் ஒரு இரவு
மீண்டும் எப்போது வருவாய்
'என் இரவுக் கனவே'