அன்பர் திரு.மு.ரா அவர்களுடனான சந்திப்பு

நேற்று அதாவது 18.08.2013 மாலை அன்பிற்குரிய திரு.மு.ரா அவர்களடுனான சந்திப்பு இனிதே நடந்தேறியது. பெங்களூரு நாகவரப்பாளயாவில் இருந்து குடும்ப சகிதம் புறப்பட்டு ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின் உத்தரஹல்லி சென்று திரு.மு.ரா அவர்களைச் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அளவளாவியது நிரம்ப மகிழ்ச்சியைத் தந்தது.

அன்பான உபசரிப்பில் நாங்கள் அசந்து போனோம் என்பதே உண்மை. நீண்ட நாட்களாகவே நிலுவையில் இருந்த இந்தச் சந்திப்பு முயற்சி ஒருவழியாக நேற்று நடந்தேறியது. இன்னும் நிறைய பேச ஆவல் இருந்த போதிலும் நேரமின்மையால் பிரியாவிடை பெற வேண்டி இருந்தது.

அடுத்த சந்திப்பு எங்கள் இல்லத்தில் இருக்கவேண்டும் என்று அவரை அன்புடன் அழைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். அரிதாக நல்ல நண்பர்களோடு நேரம் செலவழிக்கும்போது கிடைக்கும் திருப்தியை நேற்றும் உணர முடிந்தது!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (19-Aug-13, 12:45 pm)
பார்வை : 75

மேலே