இணைந்திடு! போராடு! மனிதம் வளர்த்திடு!

அப்பாவிகள் அபலைகள் அலறல்
குழந்தைகள் சிறுவர்கள் கதறல்
விவசாயிகள் கூலிகள் முனகல்

செயற்கை கருவிகளின் உறுமல்
அழிக்கப்படும் உயிர்களின் பதறல்
இயற்கை அமைப்புகளின் சிதறல்

கண்களில் காதுகளில் வீழாதோ!
உடலில் உணர்வில் தைக்காதோ!
மனதில் இதயத்தில் ஏறாதோ!

என்ன எழுத்தாளனோ நீ!
என்ன உணர்வாளனோ நீ!
என்ன பண்பாளனோ நீ!

உன் உணர்வு வெடிக்கட்டும்!
உன் இதயம் துடிக்கட்டும்!
உன் மனது பேசட்டும்!

எழுத்தில் கொள்ளி எரியட்டும்!
கொடுங்கவிதைகள் பிறக்கட்டும்!
கொடும்பாவிகள் ஒழியட்டும்!

தீமைகளை உதைத்து பந்தாடு!
கொடுமைகளை எதிர்த்து போராடு!
தோழர்களை இணைத்து நடைபோடு!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (25-Aug-13, 4:42 pm)
பார்வை : 242

மேலே