இனிய வாழ்வு...

உறவைத் தேடிடும் பறவை
உணர்ச்சிகள் விரித்தன சிறகை,
விறகாய் விரகம் எரிக்கும்
வெல்வது உடலா உணர்வா,
துறவில் என்றும் தனிமை
துணையுடன் வாழ்வே இனிமை,
மறந்திடா உள்ளம் என்றும்
மணமாம் வாழ்வைத் தருமே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Sep-13, 8:50 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 67

மேலே