ஆசிரியர் தின நாள் நல் வாழ்த்துக்கள்

மொழியை சொல்லிகொடுத்து
திறனறிந்து பாராட்டும் உயர்ந்த மகான் ...!!!!

தன்னுடைய செல்வத்தை பாராமல் கல்விச்செல்வத்தை வழங்கிய குருபகவான்...!!!

ஏணியாய் அவனை ஏற்றி தான் கீழிருந்து
உயர்ந்த இடத்தில பார்க்கும் அறிஞன்....!!!

தான் கற்றவற்றை பிறருக்கு கற்பித்து தானும்
அவ்வழியில் நடக்கும் ஒழுக்கமான தலைவன்..!!!

ஆசிரியர் தான் அறிஞன்
அவர்கள் இல்லையேல் நாட்டில் ஏது தலைவன்...!!!!

அணைத்து மாணவ,மாணவிகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்த என்னுடைய ஆசிரயர் பெருமக்களுக்கு,,,,இந்த நன்னாளில் வாழ்த்துக்களை சொல்லி பணிந்து வணங்குகிறேன்...//////

எழுதியவர் : ச.நாக சங்கர கிருஷ்ணன் (5-Sep-13, 10:11 pm)
சேர்த்தது : vairamuthusankar
பார்வை : 562

மேலே