காசுபணம் தேவையில்லை

​குப்பைகளும் கழிவுகளும்
குவிந்துள்ள சென்னையில் ​
காசுபணம் தேவையில்லை
மாசும் தூசும் பெற்றிடலாம் !

வாழும்வரை மனிதனோ
நானிலத்தில் உள்ளவரை
நலமுடன் வாழ்ந்திடவே
நாளும் நினைத்திடுவான் !

சுத்தமில்லா நகரத்தில்
நித்தமும் நாம் காணும்
காட்சியில் ஒன்றுதான்
சாட்சியாய் நின்றிடும் !

நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம்
சொல்லுவது பழங்கதை
கொல்லுவது நடைமுறை !

மாசில்லா மாநகராய்
மாற்றிட மக்களும்
ஆளுகின்ற அரசும்
நினைத்திடல் வேண்டும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (8-Sep-13, 9:45 pm)
பார்வை : 89

மேலே