சந்தோச மழைத்துளிகள்
மழையில் நனைவதற்காக வெளியில் ஓடினேன்,
அன்னை மழையில் நனையாதே என்று கத்தினார்கள்
பாவம் அவர்களுக்கு தெரியாது
நான் உன்மீது வைத்துள்ள அன்பு..
நீ! உன் சந்தோசத்தை மழைத் துளியாய் வெளிபடுத்துகிறாய் ..
நான் ஆடி பாடி வெளிபடுத்துகிறேன்..
உன் மழைத்துளியும்
என் சந்தோசமும் இணைந்து
சந்தோச மழைத்துளிகளாய் இந்த மண்ணில் விழட்டும்