விடியல்...!

இரவுகளை ஆட்கொள்ளும் இருளை,
நிலவும் நட்சத்திரங்களும் எதிர்த்து
நடத்தும் போராட்டங்கள் கூட இதமானவைதான்!
வெண்மதியை மறைக்கும் மேகங்கள்
அங்கேயே நிலைப்பதில்லை!
விலகிச்செல்லும் மேகங்கள் போல,
கடந்துபோகும் நேரங்கள் நகர்கிறது...
விடியலை நோக்கி!


வாழத் துடிக்கும் மனசு....
தாழப்பறக்கும் வண்ணத்துப் பூச்சிபோல,
சிறக்கடிக்கத் தொடங்கும்!
காணத்துடித்த விடியலின் ஒளியில்
பூத்த மலர்களில் உட்கார்ந்து...
மரகத மணிகளை உருட்டி விளையாடும்!

குயில்களின் கானங்கேட்டு
துயின்ற கதிரவன் துயிலெழுவான்!
மனவறையில் ஒட்டிய
பனித்துளித் துயரங்கள் அனைத்தும்
கதிரவன் கதிரிலே காணாமற் போகும்!
மெல்லப் பரவும் ஒளியில்
பிரசவமாகும் விடியலில்
பரவசமாகும் பூலோகம்!


வலியவன் மனதிலே இருளோடு கரைய...
ஒளியிவன் வாழ்விலே விடியலாய்ப் படியும்!

ஒவ்வொரு இரவும் இன்னொரு விடியலுக்கானது!

எழுதியவர் : ஒருவன் கவிதை (16-Sep-13, 6:02 pm)
சேர்த்தது : ஒருவன்
பார்வை : 93

மேலே