பொய்ச் சிரிப்பு... :)

என் சிரிப்புகளும் பொய் சொல்கின்றன - எனக்குத் தெரியும்!
இயல்புகளும் தம் இயல்பினை இழந்துவிடுகின்றன - புரிகிறது!
மரபியல் தாண்டிய முடிவுகளால்...
மரத்துப்போய் விடுகின்றது மனசு...!

புதிதாய் எதையோ தேடுகின்றது!!!
கிடைக்காது... என்று தெரிந்திருந்தும்,
அதற்காகவே ஏங்குகிறது !

போனதோடு போனதாய்
ஞாபகங்களும் போய்த் தொலைந்திருக்கலாம்!
நேரகாலம் தெரியாமல்...
வந்துபோகும் நினைவுகளால்,
கண்களோடு சேர்ந்து...
நனைந்துபோகின்றது மனசும்!

பாரமான இதயம் பற்றியெரிய...
ஈரமான மனசு கொதித்து,
ஆவியாகிக் கிளம்புகின்றன... ஏமாற்றங்கள்!


கலகலப்பாய் சிரித்துக்கொண்டிருக்கும் என்னில்,
மறைக்கப்படும் கண்ணீரைத் தவிர,
வேறெதுவும் உண்மையில்லை...!!!

எழுதியவர் : ஒருவன் கவிதை (17-Sep-13, 3:55 pm)
பார்வை : 129

மேலே