எல்லைகளற்ற கவிதைக் கடல்
அன்பை உணர்த்தும் சில கவிதை
ஆறுதலின் வடிகாலாகும் சில கவிதை
இயற்கையை ரசிக்கும் சில கவிதை
ஈதலை ஊக்குவிக்கும் சில கவிதை
உலகத்தை தோலுரிக்கும் சில கவிதை
ஊக்கத்தைக் கொடுக்கும் சில கவிதை
எண்ணத்தை வளம்படுத்தும் சில கவிதை
ஏற்றத்தை அளிக்கும் சில கவிதை
ஐயமின்றிவாழ வழிவகுக்கும் சில கவிதை
ஒற்றுமையை நிலைநிறுத்தும் சிலகவிதை
ஓயாமல் உண்மையுரைக்கும் சில கவிதை
ஔவையின் வழியில் சில கவிதை.........!
காட்சியும் பயனுமாகி இன்னும் பலவாகி
கிளை விரிக்கும் எம் தமிழ்க் கவிதை
அறம் தொடங்கி மோட்சம் வரை
அத்தனையும் கண்முன்னே நிறுத்தும்
அக் கவிதையெனும் பெருங்கடலை
உள்ளங் கையில் அடக்கலாமோ ..........!
நீ இப்படித்தான் இருக்கவேண்டுமென்று
சுற்றிவர எல்லைகள் இடலாமோ ..........!
வானத்தை வீட்டிற்குள் கொண்டுவர
அடம்பிடித்தல் தகுமோ அது முறையோ..!!
---------------------------------------------------------------------தோழி துர்க்கா