மனிதா!!
மனிதன் மனம் மாறவில்லை,உள்ளே
மிருக குணம் தீரவில்லை,
இனம் ஒன்றென்ற போதினிலும்,
கத்திக்குத்துச் சண்டை தீரவில்லை.
மண் பெண் ஆசை மடியவில்லை
மத பேதம் அவனுள் கொடிய எல்லை.
சாதிகள் பல கொண்டு, அதில்
சாதனை பல கண்டு
வாழ்கிறான் தான் மனிதன் என்ற
நிலை மாண்டு.