பெண்

கட்டிய கணவனாகட்டும்
பெற்றெடுத்த பிள்ளையாகட்டும் -அவர்கள்
செய்யும் தவறுகளை சுட்டிகாட்டி கேட்கும்போது

உனக்கென்ன தெரியும் அடங்கியிரு என்று
அதட்டும்போது அடங்கித்தான் போகிறாள் !
அமைதியாய் வேறுவழியின்றி !

கணவன் எவ்வளவுதான் தவறுகள் செய்தாலும்
அவனுக்கு எதாவது ஒன்று என்றால்
மனம் துடித்துதான் போகிறாள் !
அப்பாவியாய் வெகுளி பெண் !

இவளது மனதை வார்த்தையால் குத்தி கிழித்து
ரணமாகினாலும் இவள் பேசும் ஒவ்வொரு
வார்த்தையும்அவன் மனம் புண் படுமோவென
யோசித்துதான் பேசுகிறாள் பாவி பெண் !

மது மாது என ஆடி அடங்கி ஓரிடத்தில்
அமரும்போதும் தன கணவன் என
ஏற்றுகொள்ள மறுப்பதில்லை !
இப்பூலகில் எந்த பெண்ணும் !

கை கால்கள் முடமாகி முடங்கி போனாலும்
அவன் கட்டிய தாலியை தாங்கிய காரணத்திற்காக
ஆலம் விழுதாய் அவன் குடும்பத்தை தாங்கிகொண்டுதான்இருக்கிறாள் பேதை பெண் !

ஆண்டவன் படைப்பிலே அற்புத படைப்புதான்
பெண் என்பவன் அவளை எந்த அளவிற்கு
உண்மையாய் நேசிக்கிறான் ?
எதில்தான் சாதிக்கவில்லை பெண்கள் !

தவறுகளை கண்டால் தட்டி கேட்க
நினைக்கும் பெண்மனது - சமூகத்திற்கு
பயந்து தலை குனியும் அவலநிலை
இன்றும் இருக்கத்தான் செய்கிறது !
ஆணாதிக்கம் அழிந்துவிடவில்லை இன்றும் !

எழுதியவர் : வெ.வளர்மதிராஜ் (25-Sep-13, 4:53 pm)
Tanglish : pen
பார்வை : 119

மேலே