உயிர் தந்தான் உழவன் !!

மண்ணோடும்
உன்னோடும்

பிரியா உறவோடு
வாழ்ந்த நாள்களில் ,

மண் வாசமும்
உன் நேசமும்,
அழமாய் என்
மனதில்
உறைந்தது !!!!


ஏரோடும்
மண்ணிலும்
போராடும்
வாழ்க்கை !!!


மழையை
எதிர்பார்த்த
கண்களில்
உண்டான
வறட்சி
வானிலும்
தொற்றிக்கொண்டது !!!

மழை வரவில்லை
கண்ணீர் வந்தது
முந்திக்கொண்டு
வாங்கிய கடனை
நினைத்து !!!


விதையை
விழுங்கி கொண்ட
நிலமும்
முளைக்காமல்
உறிஞ்சி கொண்டது
உழைத்து
களைத்த வியர்வை !!!!

பயிர் மடியும் முன்னே
உயிர் மடிந்த எம்
உழவ பெருமக்கள்
பெருமை
வாழ்க
எந்நாளும்!!!

எழுதியவர் : sasikumar (3-Oct-13, 4:19 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 84

மேலே