அவள் ஒரு அழகிய கவிதை...!!!

புத்தழகை
உடுத்திக்கொண்டு
பூமிதனில்
தோன்றி நின்ற நீ
பூமாதேவியின் மகளோ?

வான்நிலவை
உருக்கிச் செய்த
வடித்து வைத்த
சிலையான நீ
வனதேவதையின் மகளோ?

வானவில்லின்
ஆடைகொன்டு
வாசம்வீசி வந்தவளே
நீதான் வசந்தமோ?

சிர்ப்பிகளே
செதுக்கிடாத சிலையாம்
என் நெஞ்சிக்குள்
தினமடிக்கும் அலையாம்....

நிலவுக்கு இவள்
இளைய மகளாம்
எனக்கு மட்டும்
எழுத வரும் கலையாம்....

சங்க புலவர்களே
எழுதிடாத கவியாம்
என் மனதுக்குள்
உண்டான வலியாம்....

பாட்டினிலே இல்லாத
கருத்தாம் - என்
உள்ளத்தில்
உண்டான குருத்தாம்...

ஏட்டினிலே இல்லாத
அணியாம் - என்
இளமையிலே
தினம் பெய்யும் பனியாம்....

எழுத எழுத
முடிந்திடாத தமிழாம்
நான் மட்டும்
எழுதி பருகும் அமுதாம்...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (8-Jan-11, 10:35 am)
பார்வை : 534

மேலே