மௌனம் அர்த்தமுள்ள உன்னதம்

பழுக்க வைத்தால் பழுக்கும்
பழம்
உள்ளே பழுப்பதுதான்
சிவம்
பிரித்துப் பார்க்கும் புத்தகம் தரும்
தத்துவம்
முற்றும் உள்ளே அடங்கினால்தான்
ஞானம்
மேடையெல்லாம் உரைக்கலாம் விளக்கம்
வியாக்கியானம்
மௌனம் மட்டுந்தான் அர்த்தமுள்ள
உன்னதம்

விரிவதெல்லாம் வெறும் மாயம்.
அடங்குவதே ஆன்மீகம் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (12-Oct-13, 10:26 pm)
பார்வை : 96

மேலே