ஹைக்கூ கவிதைகள்

நடக்காமலேயே
முடவனுக்கு வலிக்கும்
அய்யோ...!
கால் இல்லையே என்று

முருங்கைக்காய்
குழம்புவாடை
மூக்கைத்துளைத்தது..!
தெருவில் அமர்ந்து
தின்றுகொண்டிருந்தான்
தினப்பிச்சைக்காரன்!
பசியோடு நான்

ஓட்டையான
பாக்கெட்டை
தைக்கச் சொல்லவேண்டும்!
தெருவில் கண்டெடுத்த
ஒற்றை ரூபாய்
நாணயம்

இந்த மரம்
ரொம்ப நீளமாக உள்ளது
கனவில் மரம் ஏறும்
ஊனமுற்றவன்

கிழிந்து கிடக்கும்
மனித இனத்தை
எப்படி தைப்பது!
செருப்பு
தைப்பவனின் யோசனை

!!!கண் தானம் செய்யுங்கள்!!!
இருந்தால்தானே
தானம்
செய்வதற்கு
குருடனின் வருத்தம்

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (10-Jan-11, 4:52 pm)
பார்வை : 409

மேலே