அவள்

அவளும் மழையும்
ஒன்றுதான்...

காதிருக்கும்போதேல்லாம்
கண்ணீர்விட வைக்கிறாள் !

எதிர்பாரா வேளையிலோ
இன்பச் சாரலில் நனைக்கிறாள் !...

அமைதியாய் ரசித்தாலோ
விழி மின்னலால் எரிக்கிறாள் !

கண் மூடிக்கிடந்தாலோ
வார்த்தையில் இடியாய் வெடிக்கிறாள் !

எரித்தாலும்....
வெடித்தாலும்....

அவள் வந்தால்தானே மலரும்
என் மலர் மனம்.....

எழுதியவர் : முகில் (21-Oct-13, 11:56 pm)
பார்வை : 1460

மேலே