அவள்
அவளும் மழையும்
ஒன்றுதான்...
காதிருக்கும்போதேல்லாம்
கண்ணீர்விட வைக்கிறாள் !
எதிர்பாரா வேளையிலோ
இன்பச் சாரலில் நனைக்கிறாள் !...
அமைதியாய் ரசித்தாலோ
விழி மின்னலால் எரிக்கிறாள் !
கண் மூடிக்கிடந்தாலோ
வார்த்தையில் இடியாய் வெடிக்கிறாள் !
எரித்தாலும்....
வெடித்தாலும்....
அவள் வந்தால்தானே மலரும்
என் மலர் மனம்.....