அன்பே
சொல்லவும்
ஒன்றா
இரண்டா
முப்பொழுதும்நினைவுகள்
நான்கு அறை கொண்ட இதய சிறை முழுதும்
ஐம்புலனும் அடங்கும்
ஆறாய் பாயும் உன் முன்னே
சப்தஸ்வரமாய் இசைக்கிறாய் ... இசைகிறாய் என்னுள்ளே
எட்டாது யாவருக்கும் கிட்டாது நினைவும் அகத்தை தட்டாது
நவரசமாய் பல சுவை தருகிறாய்
பத்தாது நேரமும் பத்தாது
மிஞ்சாது உன் நினைவின்றி
இவன் உயிரும் மிஞ்சாது
Rs Av