என் விழிகளும் அவளுக்கு அடிமை

ஒரு மழைப் பொழுதினில்
காட்டில் கான மயில் ஆடக்
கண்டேன்

எப்பொழுதுமே உணர்வுகள் பொங்கிட
ரசித்திட்ட நான் -அன்று
அவ்விடம் ரசித்திட தலைப்படவே இல்லை

கண்களிடம் காரணம் கேட்டேன்
அவை சொன்னது உடன் உன்
அழகி இருக்கும் பொழுது வேறு
எதை ரசிக்க போகிறாய் என்று

அன்று உணர்ந்தேன் என் மனம்
மட்டுமல்ல என் விழிகளும்
அவளுக்கு அடிமை என்று

எழுதியவர் : தியா (23-Oct-13, 5:06 pm)
பார்வை : 79

மேலே