ஒரு மழை நாளில்
மரக்கிளையில் நடுங்கி கொண்டிருக்கும் பறவைகள்
மரத்தடி தேநீர் விடுதியில் கூடும் மக்கள் !
வெறிச்சோடிய சாலை ஆரவாரமின்றி ,
அதில் விரைவாய் பயணிக்கும் சில வாகனங்கள்!
பள்ளி குழந்தைகள் புத்தகங்களை
தலையில் கொண்டு ஒரு பயணம்!
சாலையின் வாயிலாக ஓடும் சிறுபகுதி நீரில்
படகு விடும் குழந்தையின் மகிழ்ச்சி!
இன்றைய உணவிற்கே பணம் சம்பாதிக்க
முடியாத கவலையில் நடைபாதை வியாபாரிகள்!
மழையை எதிர்பார்த்துக் காத்திருந்த விவசாயின்
மகிழ்ச்சி
இவை அனைத்தும் ஒரு மழை நாளில்...!