முளை விட்ட சிறு தளிர்
முட்டிப் பிளந்தே நிலத்தை
முளை விட்டது விதை...- அது
தட்டிக் கொடுத்தே எனை
தலை நிமிர வைததது....
சின்னக் குறள் என எனை
சிரித்துப் பார்த்தது - தளிர்
சிறந்தே வளர்ந்து - வாழ்ந்து
சிந்தையை கவர்ந்தது....!
வேலியை அமைத்தபோது - அது
வேண்டாமென்று சொல்லவில்லை
விரும்பியது சுய ஒழுக்கம் - எனவே
விரைந்து உயர்ந்தது வாழ்வினிலே...!