மருந்திட வருவானோ

எங்களின்

இதிகாசமாம்

இராமாயண கதையில் ......

இலங்கையை

இராவணன் எனும்

இராட்சசன்

இராஜ்ஜியம்தனை

ஆண்டதாலோ என்னவோ .....

அன்று முதல்

இன்றுவரை .......

இலங்ககேச்வரன்களின்

இராட்சச பிடியிலே

இலங்காபுரி

இடி விழுந்த இடமாகி

புல்முளைக்கும் பூமியாகி ....!!!!

புன்னகைதனை மறந்த

பூவரசன்களும் பூவரசிகளும் .....

பண்ணவன்

வழி நடத்தும்

இறை அவன்

இம்மண்ணுலகை விட்டே

விண்ணுலகம் சென்றதால்....!!!

பவித்திரமான

பார் போற்றும்

பாரிவள்ளல் அவன்....

மறுபிறவி கொண்டே

மனம் வெந்த மக்களுக்கு

மருந்திட வருவானோ ...!!!

எழுதியவர் : umamaheshwari kannan (3-Nov-13, 8:02 pm)
பார்வை : 128

மேலே