எந்தன் தேடல்

நெடுந் தூரத்தில் நானிருக்கவே .
பல பல துயரம் கொண்டு தான்
தினம் தினம் நான் வாடுகிறேன் ...
நீல மேகங்கள் கை அசைக்க
நானோ பல கவலை கொண்டு
எந்தன் கால்கள் தடுமாறவே .
நடை பாதையில் செல்கிறேன் .

மரங்கள் பல கை அசைக்கவே
இலைகள் கூட வேடிக்கை ..
மழை துளிகள் என் மீது விளையாட
மன அமைதி இல்லா பிள்ளையோ
ஏக்கம் சோகத்தின் யன்னல் தட்ட
நானோ எட்டி எட்டி உதைக்கிறேன்.
பாதைகளை தட்டி, தட்டி செல்கிறேன் .

நான் எழுந்து எழுந்து நடை போட
அன்பே நீ என் உயிராக இருக்கிறாய் .
இதயக் கோவிலில் உனக்கு ஒரு இடம் .
கண்கள் முட மறந்து காவியம் பேசுகிறாய் .
கண்கள் கலங்கியே உன்னை தேடுகிறேன்.
பூத்திருக்கும் பூக்கள் கூட என் மனம் புரிந்து .

அரவணைத்து அன்பு முத்தம் பொழிகிறதே..
அன்பே ஏக்கம் நிறைந்த எந்தன் உள்ளம் .
சுற்றும் முற்றும் தேடி தேடி அலைகிறேன்.
காத்திருக்கும் நேரங்கள் பல கண்ணீராக
அன்பே உந்தன் கரம் சேர்ந்து விடுவேனோ...
எந்தன் அன்பான தேடுதல் முடிவில்லையே...

எழுதியவர் : (6-Nov-13, 11:48 pm)
Tanglish : yenthan thedal
பார்வை : 55

மேலே