காட்டு வெள்ளம்
மேகத்தால் எப்படி
இத்தனை நீரையும் சுமக்க முடிந்தது ?
அணைக்கட்டு உடைந்து
கண்களுக்குள்ளும் வெள்ள நீர்
வயிற்றுக்குள் தீ மூட்டி
குளிர் காய்கிறது மாரிகாலம்
வரம்பு வரை நிற்க வேண்டிய நீர்மட்டம்
வீடுகளின் கூரை வரை வந்து
கூத்தடித்து விட்டுப்போகிறது
என்னதான் நடக்கிறது ?
கரையோரம்களை நாசம் செய்த
ஆழிக்கடளுக்கே ஏட்டிக்கு போட்டியா ?
ஒவ்வொரு தெருவுக்கும் வந்து
அட்டகாசம் செய்கிறது - இந்த
அலையில்லா சுனாமி.
இயற்கை என்னதான் சொல்ல வருகிறது ?
உப்புதிண்டவன் தண்ணி குடிப்பது போல்....
ஓசோனில் ஓட்டை போட்டவன் அனுபவிடா என்றா ?
சரி..
உன்னால் முடியும் வரை சொல்லி விட்டுப்போ
அது வரை
எங்கள் கண்களுக்குள்ளும்
காட்டு வெள்ளம் ஊத்தெடுக்கட்டும்.