காட்டு வெள்ளம்

மேகத்தால் எப்படி
இத்தனை நீரையும் சுமக்க முடிந்தது ?

அணைக்கட்டு உடைந்து
கண்களுக்குள்ளும் வெள்ள நீர்

வயிற்றுக்குள் தீ மூட்டி
குளிர் காய்கிறது மாரிகாலம்

வரம்பு வரை நிற்க வேண்டிய நீர்மட்டம்
வீடுகளின் கூரை வரை வந்து
கூத்தடித்து விட்டுப்போகிறது

என்னதான் நடக்கிறது ?

கரையோரம்களை நாசம் செய்த
ஆழிக்கடளுக்கே ஏட்டிக்கு போட்டியா ?

ஒவ்வொரு தெருவுக்கும் வந்து
அட்டகாசம் செய்கிறது - இந்த
அலையில்லா சுனாமி.

இயற்கை என்னதான் சொல்ல வருகிறது ?

உப்புதிண்டவன் தண்ணி குடிப்பது போல்....
ஓசோனில் ஓட்டை போட்டவன் அனுபவிடா என்றா ?

சரி..
உன்னால் முடியும் வரை சொல்லி விட்டுப்போ
அது வரை
எங்கள் கண்களுக்குள்ளும்
காட்டு வெள்ளம் ஊத்தெடுக்கட்டும்.

எழுதியவர் : Natheer Sheriff - அக்கரைப்பற்று (19-Jan-11, 7:13 pm)
சேர்த்தது : natheer sheriff
பார்வை : 401

மேலே