உன்னிடம் பேசாத சொற்கள்

இதுவரை ....
உன்னிடம் பேசாத சொற்கள்
தன் ஒலி கேட்கத் தவித்திருக்கும்
என் மனக்குளத்தில்.

இடைமறிக்கும்...
என் மனத் தடையை
எரிச்சலோடு கடந்து செல்கிறது
மௌனம்.

சொற்களின் புதைவில்
நினைவற்றதாகிவிடும் உடலில்
எழும்பி...எழும்பி...
அலைகிறது உன் அலை.

நிசப்தமற்ற...
என் நிசப்தங்களை....
ஒளித்துவைத்த கனவுகள்
தின்று செரிக்க....
யாருமறியாமல் உலர்ந்து கொண்டிருக்கிறது
என் ஈர முத்தங்கள்.

பழுத்துதிரும் இலைகள்...
சருகுகளாகிப் பெருக்கும் சப்தங்களென...
என் மௌனத்தின் மூச்சுகளில்
அலைந்து திரும்புகிறது உன் பெயரொலிகள்.

எஞ்சும் வேதனையில்....
எல்லாப் பயணங்களும் முடிந்துவிட...

இன்று பெய்யும் மழையிலும்
உதிர்ந்து கொண்டிருக்கிறது
என் கண்ணீர்ப் பூக்கள்
என்னைச் சுட்டபடி.

எழுதியவர் : rameshalam (18-Nov-13, 5:12 pm)
பார்வை : 98

மேலே