சுனாமி
நீலம் மாறாத
நீளப் பெருங்கடலே!
கரை தொட்டு
நுரை விட்டுச் செலும் கடலே!
என்றும் ஓயாது ஓடும் கடலே!
உன்னை நான்
புகழ்வதா? இல்லை இகழ்வத?
கரை தொட்டுச் செலும் நீ,
ஏன் கரை தாண்டி வந்தாய்?
பாவக்கரை படிந்த பூமியின்
கரை நீக்க உன் கரை தாண்டி வந்தாயோ?
நீ கரை நீக்கினால் தவறில்லை.
நீயோ பல உயர் நீக்கினாயே!
உயிர் நீத்த பல குடும்பங்களின்
கூக்குரல்கள் உனக்கு கேட்கவில்லையா?
ஓயாத ஓப்பாரி உனக்கு ஒலிக்கவில்லையா?
உன் கொடிய கோபத்தால்
பல உயிர் விழுங்கினாய்.
போதும் உன் கொடிய கோபத்தை கொன்று விடு
பல கோடி ஜிவன்களை நீ மண்ணில் வாழ விடு!