ஏன்ஏன்ஏன்
நினைக்கிறேன் உன்னை மறக்கத்தான்
சந்திக்கிறேன் உன்னைப் பிரியத்தான்
நெருங்குகிறேன் உன்னை விட்டுவிலகத்தான்
சிந்திக்கிறேன் உன்னை நிந்திக்கத்தான்
பகலில் சூரியனும் குளிர்கிறான்
இரவில் சந்திரனும் காய்கிறான்
கார்காலத்தில் கடும் வெய்யில்
கோடை காலத்தில் கடும் குளிர்
பாலையெங்கும் புல்லாய்த் தெரிகிறது
மருதமெங்கும் மணலாய்த் தெரிகிறது
குறிஞ்சியெங்கும் குளமாய்த் தெரிகிறது
நெய்தலெங்கும் மலையாய்த் தெரிகிறது
நெய்யில் பாலைக் காண்கிறேன்
நூலில் பஞ்சைக் காண்கிறேன்
தேனில் பூவைக் காண்கிறேன்
நீரில் மேகத்தைக் காண்கிறேன்
என் விழியில் உன்னைக் காண்கிறேன்
உன் விழியில் என்னைக் காண்பேனா?