இறைவனின் தேடல்

இறைவன் மனிதனை
சந்திக்க உலகிற்கு
வரத் திட்டமிட்டான் !

இதோ நெடுஞ்சாலையில்
ஒரு விபத்து ,
உயிருக்கு போராடும்
அவனைப் பார்த்தும் ,
பலர் நமக்கேன் வம்பு
என்று வரவில்லை ,
சிலர் தன் வாகனம்
வீணாகிவிடும் என்று
வரவில்லை ,
சிலருக்கு பரிதாபம்
இருந்தும் நேரமில்லாமை
என்று வரவில்லை....

இறுதியில் ஒருவன் ஒரு வழியாய்
நூற்றி எட்டுக்கு தகவல் கொடுத்தான் ,
போலீஸ் தகவல் அறிந்து
வந்து பார்த்தால் ,
அவனைச் சுற்றி கோடுதான்
போட முடிந்தது ...

அருகில் சென்று பார்த்தால் ,
இறைவன் இறந்திருந்தார் ,

திடுக்கிட்டு கண்விழித்தான்
இறைவன்... உலகம் சுற்றும்
கனவைக் கலைத்தான் !

இன்றும் இறைவன்
இருக்கிறானா? என்ற
கேள்வியே தேவை இல்லை ,
அவன் இன்றும் மனிதனை
படைத்துக் கொண்டு தான் இருக்கிறான் ,
பின் இந்த கேள்விக்கு காரணம்...
மனிதனை அவன் படைத்துக்கொண்டு தான்
இருக்கிறான் !
ஆனால் மனிதனில் மனிதம்
மரித்துக் கொண்டிருக்கிறது !

எழுதியவர் : (26-Nov-13, 6:35 pm)
Tanglish : iraivanin thedal
பார்வை : 98

மேலே