எனக்கென்ன ‘போ’ - கஸல்
நாம்
முடிவெடுத்தபோது
இறந்துபோய் இருந்தால்
என்னவாகியிருக்கும்
நம் காதல்?
எனக்கென்ன?
‘போ’ என்று சொல்லிவிட்டு
போகிறவர்கள் போல
நீ
என்னை விட்டுப் பிரிகின்றாய்
நாம்
பிரியும் வேளை
பாவங்கள்
ஒன்று சேர்ந்து
அழுகின்றன!