போற பொண்ணே

நெத்தியிலே பொட்டு வச்சி
நெத்திலி மீனு குழம்பு வச்சி
நெல்லறக்க போற பொண்ணே
நெல்லறக்க போகும் போது
நெஞ்சு நெறஞ்ச மாமன் வரான்
மாமன பார்த்த உடன்
மயங்குதடி உம் மனசு ....!!!

சுங்குடி சேலை கட்டி
சுறுசுறுப்பா நடை போட்டு
களை எடுக்க போற பொண்ணே
களை எடுக்க போகும் போது
காளை என மாமன் வரான்
மாமன பார்த்த உடன்
காணாமல் போனதடி உம் மனசு ...!!!

கூந்தலிலே பூ முடித்து
கூழுதனை கலயத்தில் ஏந்தி
சோளம் விதைக்க போற பொண்ணே
சோளம் விதைக்கும் போது
சோளக்காட்டு பொம்மை என
சோக்கான மாமன் வரான்
மாமன பார்த்த உடன்
சோடி சேர்ந்து ஆடிடவே
துடிக்குதடி உம் மனசு ......!!!

எழுதியவர் : umamaheshwari kannan (29-Nov-13, 4:11 pm)
பார்வை : 162

மேலே