வல்லமை அருள்வாயே

தேடிக் குறைகள் நிதம் சொல்லி
பிறர் வாடப் புறம் பேசி
அழுக்காறு அகம் கொண்டு
பொய்யுரைத்து பூசல் செய்யும்
சில பேடி மனிதர்களால் நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ ! – இறைவா
நின்னை சில வரங்கள் கேட்பேன்
இனிதே அவை அளித்திடல் வேண்டும்
முன்னை என் அல்லவை நீக்கி
பின்னை என் மனம் நிலை நிறுத்தி
நல்லவை மட்டுமே நாடி - நாளும்
நயம்பட காரியம் ஆற்ற
வல்லமை அருள்வாயே !



( மஹாகவி பாரதியின் வரிகளைத் தழுவி )

எழுதியவர் : thilakavathy (3-Dec-13, 4:38 pm)
பார்வை : 91

மேலே