பெண்ணிலவே என் வெண்ணிலவே

என் நெஞ்சின் வானில் உதித்த வெண்ணிலவே
என் நித்திரை கனவில் உறவாடும் பெண்ணிலவே
நேரில் வருவாயா??-இல்லை
என் நிலைகண்டு சிரிப்பாயோ??!

என்னை நான் மறந்தது
உணவு ,உறக்கம் துறந்ததும் ,
எண்ணங்கள் சிதைந்து போய்
சிந்தனைகள் விலகி ஓடியதும்
பெண்ணே உன்னால்தானோ !!

நெஞ்சம் துடிப்பதும்
துடிப்பில் உன் பெயர் ஒலிப்பதும்
கண்கள் உருகுவதும் -அவைகள்
உன்னை காண ஏங்குவதும்
என் நிலை குலைந்து
உன்னை தேடி அலைவதும்
பெண்ணே உன்னால்தானோ !!

நீயே என் தெய்வம் என புலம்பினேன்
உனக்கவே என் தேவாரம் பாடினேன்
உன் பெயரில் அர்ச்சனை செய்தேன்
என் உற்றார்களிடம் அர்ச்சனை வாங்கினேன்
இத்தனை மாற்றங்கள்
பெண்ணே உன்னால்தானோ !!

என் இதயவானில் உதித்த வெண்ணிலவே
என்றும் நீ பௌர்ணமியே என்னில் ,
என்னுடன் நீ இருந்தால் இன்பம்
எனக்கு வேறுண்டோ இவ்வுலகில்

என் நெஞ்சின் வானில் உதித்த வெண்ணிலவே
என் நித்திரை கனவில் உறவாடும் பெண்ணிலவே
என் மன இருளை போக்க
நிலாவே வா ...
என்னருகில்

என்றும்...என்றென்றும் ..

எழுதியவர் : jeevan (6-Dec-13, 5:54 am)
பார்வை : 142

மேலே