எனைச் சுற்றிலும் இனிய உறவுகள்
தனிமையில் இருக்க நேர்ந்தால்
தள்ளாடாதே மனதில் நீ.......!
உடல் மட்டுமே அங்கு தனிமை - உண்மையில்
உள்ளச் சிந்தனைக்கு உறவுகள் ஏராளம்...!
உயிரோட்டாமாய் தமிழ் புத்தகமும்
உவகையுற தொட்டு மகிழும் தென்றலும்
தூரத்துப் பட்டாம் பூச்சியும்....
தொல்லை செய்யா மனித சத்தமும்.......
நிறைந்த உறவுகளாய் உனக்கு இருக்க....நீ
நிம்மதியாய் வாழ்ந்து பழக......
தனிமை ஒரு
தன்னிகரில்லா ஒரு இனிய பயிற்சி - எனவே
தனிமையில் இருக்க நேர்ந்தால்
தள்ளாடாதே மனதில் நீ.......!